பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி நிறுவனம், தனது கார் மாடல்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
அடுத்து வரும் பண்டிகை காலத்தில் வாகன விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு மோட்டார் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது மாருதி சுசுகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளனர்.
புதிய அறிவிப்பில் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்படி, எர்டிகா மாடலுக்கு 5 ஆயிரம் ரூபாய், மாருதி டிசையர் மாடலுக்கு 36 ஆயிரம் ரூபாய், வேகன் ஆர் மற்றும் இகோ மாடல்களுக்கு 36 ஆயிரம் ரூபாய், ஸ்விப்ட் மாடலுக்கு 36 ஆயிரம் ரூபாய்
மற்றும் ஆல்டோ 800 மாடலுக்கு 39 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி செலரியோ மாடலுக்கு மொத்தத்தில் 51 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகையும், விட்டாரா பிரெஸ்ஸா மாடலுக்கு 31 ஆயிரம் ரூபாய் வரையிலான சலுகையும் வழங்கப்படுகிறது. எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 46 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நெக்சா பிராண்டிங் மாடல்களான எஸ் கிராஸ் ரூ. 40 ஆயிரம் வரையிலான சலுகைகளும், ரூ. 37 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீ பேக் வழங்கப்படுகிறது. சியாஸ் மாடலுக்கு ரூ. 51 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.