இந்தியாவில் ஜாவா நிறுவனத்தில் பிஎஸ்6 மோட்டார் சைக்கிள் விற்பனை துவங்கியுள்ளது.

இந்திய சந்தையில் மார்ச் மாதம் அறிமுகப்படுத்திய ஜாவா மற்றும் ஜாவா ஃபார்டி மாடல்களின் பிஎஸ்6 மோட்டார் சைக்கிள்களின் விநியோகம் தற்போது துவங்கி உள்ளது.
கொரோனா வைரசால் ஏற்பட்ட ஊரடங்கினால் இதன் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டது,இதனையடுத்து ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதை அடுத்து தற்போது விற்பனை தொடக்கம்.
புதிய பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களில் பிஎஸ்6 என்ஜின் கிராஸ் போர்ட் தொழில்நுட்பத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இது என்ஜினுக்கு சிறப்பான எமிஷன் கண்ட்ரோல் வழங்குகிறது. மேலும் இது தனித்துவம் மிக்க ட்வின் எக்சாஸ்ட் டிசைனை வழங்குகிறது.

புதிய என்ஜின் தவிர இந்த மோட்டார்சைக்கிள்களின் திராட்டிள் ரெஸ்பான்ஸ் கூர்மையாக மாறி உள்ளது. மேலும் இந்த பிஎஸ்6 மாடலில் புதிய பொசிஷன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. இது எரிபொருளில் இருந்து வெளியேறும் காற்றின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
புதிய மாடல்களில் 293சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 26.2 பிஹெச்பி பவர், 27.05 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது முந்தைய பிஎஸ் மாடலை விட சற்றே குறைவான செயல்திறன் ஆகும். இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.