தங்க நகைகளை வாங்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மத்தியில், முதலீட்டாளர்களுக்கு தங்கமானது பாதுகாப்பு புகலிடமாக மாறியுள்ளதால் விலை புதிய உச்சம் தொட்டு வருகின்றது.
இதற்கிடையில் தான் நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது 19% அதிகரித்துள்ளது. இது ஒன்பது வருடங்களில் இல்லாத உச்சமாகும்.
மேலும் எளிதான பணவியல் கொள்கைகள் மற்றும் பொருளாதாரங்களை உயர்த்துவதற்கான பிற நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேசமயம் உலகின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இது சீரற்ற பொருளாதார வளர்ச்சியினையே சுட்டிக் காட்டுகிறது. இதனால் தங்கம் விலை அதிகரிக்கும் என்பதே நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
ஐரோப்பிய அரசாங்கங்கள் பொருளாதாரத்தினை ஊக்குவிக்க, மிகப்பெரிய தொகுப்புகள் அடங்கிய பொருளாதார ஊக்குவிப்பு பேக்கேஜ்களை அறிவிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இதே நிலையை அமெரிக்காவும் கையில் எடுத்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இது கொரோனா வைரஸினால் நிலைகுலைந்து போயுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க, ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுக்கலாம். எது எப்படி இருந்தாலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்கின்றனர், நிபுணர்கள்.