திரைப்பட கேமராவைக் கட்டிப்பிடித்து நடிகர் தனுஷ் நெகிழ்ச்சி அடைந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர். இவரது நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் பட்டாஸ் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தற்போது அக்ஷய் குமார் நடித்து வரும் அத்ராங்கி ரே என்னும் இந்திப் படத்திலும் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச் முதல் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன.
அப்போது அத்ராங்கி ரே படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது அவர், கேமராவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்து, உண்மையான லவ், உன்னை ரொம்ப மிஸ் செய்தேன் என்று ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். கேமராவைக் கட்டிப்பிடித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியதை இணையத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.




