தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சரியாக வேலை செய்யாத மைக்கை பொது நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ‘இரவில் நிழல்’. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இரவின் நிழல் வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டு இருந்தால், கொண்டாடியிருப்பார்கள். நம்முடைய தமிழ் கலைஞர்களிடம் நிறைய திறமைகள் உள்ளன என்று கூறினார்.
தொடர்ந்து நடிகர் பார்த்திபன் பேச முற்பட்ட போது, அவருடைய மைக் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த அவர் மேடையில் இருந்தவாறே மைக்கை பார்வையாளர் பகுதிக்கு வீசி எறிந்தார். இதனால் உடன் அமர்ந்திருந்த ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் விருந்தினர்களுக்கு தர்ச சங்கடமானது.