அஜித் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெளியாகி உள்ளது. இன்று ஐந்து சிறப்புக் காட்சிகள் என்பதால் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் இப்படத்தை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்து, மேளதாளம் முழங்கியும், பாலாபிஷேகம்செய்தும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அம்பத்தூரிலும், புதுக்கோட்டையிலும் அஜித்தின் கட் – அவுட்டிற்கு பீரால் அபிஷேகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை திரிஷாவும் குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் முதல்காட்சியை கண்டு ரசித்தனர்.