ரியோ ஆரி தன்னை பயப்படுத்துவதாக கேபியிடம் சொல்லி கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது.
இதில் முந்தைய புரோமோவில் ஆரியின் உழைப்பை மதிப்பிடாமல், அவர் மற்றவர்களுடன் சேரவில்லை என்பதை சொன்னதால் மக்கள் தன்னை தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்து ரியோ, நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை என்பதை சொன்னார்.
READ MORE- ‘நான் கேவலமானவன் இல்லை’- கோபத்தில் ரியோ! #BiggbossPromo1
அந்த விஷயத்தை தற்போது கேபியிடம் பேசி கொண்டிருக்கிறார். ‘ஆரி ஒரு மாதிரி பயத்தை கொடுக்கறாரு. அவரு மத்தவங்க கூட மிங்கிள் ஆகல அப்படிங்கற சிம்பிள் விஷயத்தைதான் சொன்னேன். ஆனா, அதுக்காக மக்கள் உன்னை பத்தி இதுக்காக என்னை நினைப்பாங்க. என் உழைப்ப மதிப்பிடல. என் குழந்தை வரும் போது கூட ரூல்ஸ் பின்பற்றினேன் அது இதுன்னு.
அந்த குழந்தை வரும் போது அவ்வளவு ஆசையா விளையாடினேன். ஆனா, வெறுப்பை ஏற்படுத்திருவாரு போல’ என சொல்வதோடு புரோமோ முடிகிறது.




