இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் அடுத்த படத்தில் நடிக்க துருவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடிக்க துருவ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. ‘ஆதித்ய வர்மா’, ‘சீயான்60’க்கு பிறகு துருவ்க்கு இது மூன்றாவது படம். அது போலவே இயக்குநர் மாரி செல்வராஜ்க்கும் இது மூன்றாவது படம்.
READ MORE- ‘கர்ணன்’ வெளியீடு எப்போது?
இந்த படத்தில் ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்த தமிழக கபடி வீரரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறதாம். எனவே, இந்த படத்தில் கபடி வீரராக நடிக்கிறார் துருவ்.
தனுஷின் ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் அடுத்த மாத இறுதியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.
படத்தில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.




