நடிகர் விஜய்க்கு பலத்த கரகோஷம் எழுப்பி கரவொலி எழுப்பிய ரசிகர்கள் அமைதி காக்குமாறு கமல்ஹாசன் கையை உயர்த்தி கட்டுப்படுத்திய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடந்தது.
விக்ரம் படக்குழுவினர் மட்டுமின்றி பல்வேறு திரையுலக பிரபலங்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் அரங்கினுள் நுழைவதை பார்த்த ரசிகர்கள் பலர் கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத கமல், தனது இருக்கையில் இருந்தவாறே கையை உயர்த்தி ரசிகர்கள் அமைதி காக்குமாறு கூறினார். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் கமலின் சைகை குறித்து ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.