நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன் படம் பூஜையுடன் தொடங்கியது.

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தற்போது ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். K.P.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பாளர் S.கதிரேசன். இயக்குனராக அறிமுகமாகும் “ருத்ரன்” படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கின்றனர்.




