இன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.இந்த நிகழ்வை உலகமே வியர்ந்து பார்த்தது.இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய ராமர் பக்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமர் உருவத்தையே பொட்டாக வைத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
ராமபிரான் படங்களை தங்கள் சமூக வலைத்தளத்தின் முகப்பில் பல பிரபலங்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்ட உடன் அந்த கோவில் எப்படி இருக்கும் என்கிற டிசைன் கொண்ட புகைப்படங்களும் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்களுடைய ராமர் பக்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமர் உருவத்தையே பொட்டாக வைத்து தனது பக்தியை வெளிப்படுத்தியுள்ளார். ராமர் பொட்டுடன் கூடிய சுகன்யாவின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.