Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

விடியல்

September 28, 2020
– ரம்யா ரவீந்திரன்

பரமசிவம் “அப்பாடா” என்றவாறே அந்த சேரில் சாய்ந்து உட்கார்ந்தார். அந்தப் பழைய நாற்காலியும்  அவருடைய சோர்வை பிரதிபலிப்பது போல் “க்ரீச்” என்று சப்தம் எழுப்பியது. கழுத்தில் வியர்வை அரும்பி அவரது முதுகில் வழிந்தது. டேபிளிலில் இருந்த ஃபேன் ஸ்விட்சை தட்டினார். அந்தப் ஃபேன் காற்றுப் பட்டதும் ரொம்ப இதமாக இருந்தது. அவருடைய அரவம் கேட்டு ராஜம் ஒரு டம்பளரில் தண்ணீர் எடுத்து வரவும், அதை ஆர்வத்துடன் வாங்கிப் பருகினார்.

பரமசிவத்திற்கு வயது எழுபத்தி இரண்டு ஆகிவிட்டது. கவர்மெண்ட் உத்யோகத்தில் இருந்து ரிட்டையர்ட் ஆன பின், முழு மூச்சாக விவசாயத்தை கவனிக்கிறார். வயோதிகத்திற்கு ஏற்றத் தளர்வு அவரிடம் இருந்தது. சிறு வயதில் மாநிறமாக இருந்தவர், வயதின் காரணமாக இப்பொழுது சற்றே கருத்திருந்தார். ராஜத்திற்கு வயது அறுபத்தி ஐந்து. ஆனாலும் பெரிதாக வயது தெரியவில்லை. நல்ல நிறம். களையான முகம். “ஏங்க வக்கீலை பார்த்தீங்களா? என்ன சொன்னார்?” என்றாள்.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

“பார்த்தேன் ராஜி. நிலத்துக்கான பட்டா நம்ம பேர்ல தான் இருக்கு. அதனாலே அவனுக்கு எதுவும் உரிமை இல்லை. என்னா நமக்குன்னு ஒண்ணுன்னா இங்கக் கேள்வி கேக்க நாதி இல்லன்னு தான் பிரச்சனை பண்றாங்க. உடம்பு இருக்குற இருப்புக்கு, முன்ன போல போய் நிலத்தை பார்க்க முடியல. இதெல்லாம் அவங்களுக்கு சாதகமா இருக்கு. அது மட்டும் இல்லாம உள்ளூர்ல செல்வாக்கு இருக்கு.  ஸ்டே ஆர்டர் வாங்கலாம்னு வக்கீல் சொல்றார். கொஞ்சம் போலீஸ் ஸ்டேஷன், வக்கீல்ன்னு அலையணும். சரவணன் கிட்டப் பேசறேன். என்ன சொல்றான்னு பார்ப்போம்” என்றார்.

ராஜத்திற்கு நன்றாக தெரியும், சரவணன் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணக் கூடியவன் இல்லை. சரவணன், ராதா என்று அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ராதா திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறாள். சரவணனுக்கு திருமணமாகி அமெரிக்காவில் இருக்கிறான். அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். சரவணன் மனைவி நளினியும் கணினி துறையில் பணிபுரிகிறாள்.  

முன்பெல்லாம் பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசிப்பது இருவருக்கும் பெருமையாக இருந்தது. கொஞ்சம் வயது ஏற ஏறத்தான் அவர்களுக்குக் கவலை வந்தது. சிதம்பரத்திற்கு அருகில் இருந்த லால்பேட்டையில் அவர்களுக்கு பத்து ஏக்கர் நிலம் மற்றும் வீடு இருந்தது.  பூர்வீக சொத்து என்பதால் பரமசிவத்திற்கு அந்த நிலங்களை சரியாகப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்பது எண்ணம். “என் கண் மறையுற வரைக்கும், இதை நல்லப்படியாக பாதுகாத்து வைப்பது என்னுடைய கடமை” என்பார். 

பரமசிவத்தின் தாத்தா அந்த ஊருக்கு வெறும் ஐந்து ரூபாயுடன் வந்து, கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து சேர்த்த சொத்து அது. ஆனால் விவசாயம் என்பது முன்பிருந்தபடி அத்தனை ஆரோக்கியமாக இப்பொழுதெல்லாம் இல்லை. காவிரியில் தண்ணீர் வந்தாலும், கொள்ளிடம் நிரம்பினால் தான் பரமசிவத்தின் நிலங்களுக்கு தண்ணீர் வரும். காவிரியில் தண்ணீர் வருவதும் கல்லில் நார் உரிப்பதும் ஒன்றுதான். அப்படியே தண்ணீர் வந்தாலும், விவசாயத்திற்கு ஆட்கள் கிடைப்பதில்லை, விளைந்த பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காதது என்று பல்வேறு பிரச்சனைகள்.

சென்றமுறை ஃபோனில் பேசியபோதே சரவணன் ராஜத்திடம், “ஏன்மா அப்பாவை நிலத்தை இப்பவாவது விக்கச் சொல்லு. வயசான காலத்துல வீட்ல அக்கடான்னு இருங்கன்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்க. இதுக்கு மேல என்னச் சொல்லி புரிய வைக்க” என்று கோபமாகவே பேசினான்.

மருமக பெண்ணுக்கும் இந்தப் பூர்வீக நிலமோ, வீட்டையோ பற்றிய பெரிய பற்றுதல் இல்லை. வேறு குடும்பத்தில் இருந்து வந்தப் பெண், இந்த மாதிரி ஒரு கிராமத்திற்கு குடும்பத்துடன் வந்து விவசாயம் பார்த்து வாழ வேண்டும் என்ற அவசியம் ஒன்றும் இல்லை. திரும்பவும் சரவணன் நிலத்தை விற்கத் தான் சொல்ல போகிறான். சொன்னாலும் இவரும் கேட்கப் போவதில்லை. சரவணனையும் குற்றம் சொல்லி ஒன்றும் இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டுமே இப்பொழுது அந்த ஊரில் விவசாயம் பார்த்து வருகிறார்கள். அவர்களும் வெளியூரில் இருந்து வந்து வேலைகளை முடித்துவிட்டு,  பின்பு உடனேயே ஊருக்கு சென்றுவிடுவார்கள். அந்த ஊரில் தங்குவதில்லை.

அப்பொழுதெல்லாம் அவர்கள் வீடு இருந்த அதே தெருவில் உள்ள பல வீடுகளில் முக்கியஸ்தர்கள், நிலச்சுவான்தார்கள் என்று பலர் இருந்தனர். நகரத்தை நோக்கி அனைவரும் நகரத் தொடங்கிய பின், ஆட்கள் யாரும் இல்லாமல், இப்பொழுது அந்த தெருவே வெறிச்சோடிப் போய் விட்டது. ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே இப்பொழுது அவர்கள் வீடு இருந்த தெருவில் வசித்தனர். மின்சாரம் நிற்பது அல்லது அடிக்கடி லோ வோல்ட்டேஜ் தொல்லை வேறு.  “ராத்திரி இந்த எண்ணெய் வழியற பல்பு வெளிச்சத்துல உப்புமாவை கிளறும் தலையெழுத்து என்னைக்கு எனக்கு மாறப் போகுதோ” என்று அலுத்தவாறே அடுக்களைக்குச் சென்றாள் ராஜம்.

அன்று இரவே சரவணனுக்கு ஃபோன் போட்டார் பரமசிவம். பிரச்சனையை கேட்டவன் “ஏன்ப்பா, நான்தான் சொன்னேனே. இப்போ நீங்க சண்டைப் போட்டு வாங்குற நிலம் எவ்வளவு விலை போகும்”…

“என்ன ஒரு, ஒரு லட்சம் கிடைக்கும்.” 

“இதுக்காக நீங்க இப்போ அங்கே இங்கேன்னு அலைஞ்சி திரிஞ்சி  என்னத்தை சாதிக்க போகுறீங்க. நான் ஒரு தடவ குடும்பத்தோட அங்க வந்துப் போகணும்னாலே ஃபிளைட் டிக்கெட்டே அதை விட ஜாஸ்தி விலை ஆகும். நீங்க உடம்பு நல்லா இருக்கும் போதே, இப்போ மிச்சம் இருக்குற நிலத்தையாவது வித்து செட்டில் பண்ண பாருங்க. நானோ நளினியோ அந்த ஊர்ல வந்து கஷ்டப்படணும்னா நீங்க நினைக்கறீங்க”

“இல்லப்பா. எங்கத் தாத்தா பாத்து பாத்து வாங்கன இடம். நாளைக்கு பரமசிவன் ஏமாந்துப் போய் நிலத்தை விட்டாருன்னு ஊர்ல எல்லாரும் பேசுவாங்க. அவன் அடாவடியா நம்ம நிலத்த வளைச்சிப் போட்டு, அங்க மோட்டார் வெச்சு தண்ணி இறைச்சிக்கிட்டு இருக்கறான். யாரும் கேக்கலைனா இப்போ எடுத்துக்கிட்ட நிலத்தோட சேர்த்து, முழு நிலமும் கையை விட்டுப் போய்டும். நீ தான் உனக்கு தெரிஞ்ச ஃபிரண்டு போலீஸ்ல இருக்காருன்னு சொல்வியே, அவருகிட்டச் சொல்லி ஏதாவது லீகலா உதவிப் பண்ண முடியுமான்னு கேட்டுச் சொல்லு.”

“என்னப்பா நீங்க, அந்த 30 சென்ட், போனா என்ன.. இருந்தா என்ன.. இப்போ. நிலத்தை வித்துட்டு வீட்ல ஓய்வா இருங்கன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கைவிட்டுப் போன ஒண்ணை சரி பண்ணணும்னு சொல்றிங்க. நீங்க, அவனை மாதிரி, அடாவடியா பம்ப்பை பிடுங்கிப் போட்டுட்டு, நிலத்தை உழுது விதைச்சிடுங்கன்னு சொன்னாலும், ஊர்ல இது வேறு ஒரு மாதிரி  பிரச்சனையா மாற வாய்ப்பிருக்குன்னு சொல்றிங்க. ஒண்ணும் செய்ய முடியாதுன்னு விட்டுட்டுப் போங்க”

“அது எப்படிப்பா” என்று ஆரம்பித்தவரிடம்…

“சரி, நீங்க லீகலா ஸ்டே வாங்கறிங்கண்ணே வெச்சுக்கலாம். அந்த நிலம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் விலைப் போகும்னு சொல்றிங்க. இதுக்கு நீங்க அங்கேயும் இங்கேயும் அலைஞ்சி போலீஸ்காரனை பாத்து அவங்களுக்கு செலவுப் பண்ணி, அப்பறம் வக்கீலுக்கு காசு கொடுத்து, மீட்கும் போது நிலத்தோட முக்கால் வாசி விலை அளவு செலவு பண்ணியிருப்போம். இந்த வயசான காலத்துல உடம்பாலயும் கஷ்டப்படணும். பேசாம விடுங்க. இதெல்லாம் நான் வந்து பாக்கணும்னா அதுவும் கஷ்டம்.”

“விவசாயி சேத்துல கால வெச்சாதான், சோத்துல நாம கையை வெக்க முடியும்னு லைக்ஸ் வாங்க வேணா முகநூல்ல போட்டுக்கலாம். இன்னைக்கு ஊருக்கு வந்து விவசாயம் பாக்குகற மாதிரியா இருக்கு. தண்ணி வரலை, ஆள் கிடைக்கலை, போட்ட முதல் எடுக்கற அளவு கூட இப்போ விளைபொருளை விற்க முடியலை. நீங்க இப்போ விவசாயம் பண்றது எல்லாம் உங்களுக்கு கொஞ்சம் பொழுதுபோகுது. அதை தவிர வேற ஏதாவது பிரயோஜனம் இருக்கா. விவசாயம் பண்றதுக்கே, வேற ஏதாவது தொழில் பண்ண வேண்டிய நிலைமையில தானே இருக்கோம், இல்லேனா இன்னைய தேதியில் விவசாயம் பண்ணத்தான் முடியுமா? இதெல்லாம் தேவை இல்லாத வேலை. இருக்குறத வித்து பேங்க்லே போடுங்க. வட்டியாவது வரும்” என்று படபடவென பொரிந்தான்.

பரமசிவமும் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் மெளனமாக ஃபோனை வைத்தார்.

ஒரு வாரம் கழித்து ஒரு சாயங்கால வேளையில், சரவணன் அவனுடைய கணினியில் ஏதோ ஒரு வேலையில் மூழ்கி இருந்தான். அவனுடைய மகள் நந்தினி வந்து “அப்பா பார்க்குக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்றாள். 

“இரு நந்து, அப்பா ஒரு ப்ரோக்ராம் எழுதிக்கிட்டு இருக்கேன். முடிச்சிட்டு வரேன். ஒரு மணி நேரம் கழிச்சுப் போகலாம்.”

“நீங்க மேனேஜர் தானே. உங்க டீம்ல வேலை பாக்குற ஒருத்தரால எழுத முடியாதா? நீங்க ஏன் எழுதணும்?”

“இல்ல நந்து, நானே இதைச் செய்யும் போது எனக்கு ப்ரோக்ராமிங்  செய்யறது எப்படிங்கறது மறக்காம இருக்கும். ப்ரோக்ராமிங் என்பது கணினி துறையில தேவைப்படற ஒரு அடிப்படையான திறமை. இது தான் அடித்தளம்-னும் சொல்லலாம். புதுசு, புதுசா எத்தனை சிறந்த டெக்னாலஜி வந்தாலும், இந்தத் துறைக்கான அடிப்படை திறமை நல்லா ப்ரோக்ராம் எழுதறது தான். அதை மறக்கக் கூடாது. அதான் நேரம் கொஞ்சம் கூட ஆனாலும், எப்பவுமே நானே எழுதிப் பார்ப்பேன். அதுல எனக்குப் பெரிய ஆத்ம திருப்தியும் கிடைக்கிது”

அப்பா, அப்படின்னா வாழறதுக்கான அடிப்படை தேவை உணவு தானே. அந்த உணவு எப்படி விளைவிக்கனும்னு ஒவ்வொரு மனுஷனுக்கு தெரிய வேண்டாமா?

மகள் கேட்ட கேள்வி, அவனை ஒரு நிமிஷம் திகைக்க வைத்தது.

“என்ன நந்து, பெரிய மனுஷி மாதிரி பேசற? இதை எல்லாம் உனக்கு யாரு சொல்லிக் கொடுத்தா “

போன வாரம் நீங்க தாத்தாவோட கோவமா பேசிட்டு ஃபோனை வெச்சிட்டிங்க. அதுக்கப்புறம் தாத்தா என்னோட பேசினாங்க. தாத்தா என்ன சொன்னாங்க தெரியுமா அப்பா? நந்து, ஒவ்வொரு மனுஷனும் லாப நஷ்ட கணக்குப் பார்த்தா உலகத்துல எதுவும் மிஞ்சாது. மரம் வெச்சவன் இதனாலே எனக்கு என்னப் பலன் கிடைக்கும்னு யோசிச்சிருந்தா, இன்னைக்கு யாருக்கும் நிழல் என்பது என்னன்னு தெரியாமப் போயிருக்கும். விவசாயம் வாழ்க்கைக்கான அடிப்படை வாழ்வியல் திறன். அதை எல்லா தலைமுறையும் கத்துக்கணும். நீ அடுத்த முறை ஊருக்கு வரும்போது உனக்கு இதைப் பத்தி நான் சொல்லித்தரேன்.

படிச்சவங்க அவங்கப் படிப்பை பயன்படுத்தி ஒரு தொழில்ல இருக்குற பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரணுமே தவிர, இந்தத் தொழில்ல லாபம் இல்ல, அதனாலே செய்யாதேன்னு சொல்றது தப்பு. எந்தத் தொழில் செஞ்சாலும், பசிச்சா அரிசி மட்டும் தானே சாப்பிட முடியும். ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊரில் கொரோனா ஊரடங்கினால் நிறைய பேர் வேலைக்குப் போக முடியாம கஷ்டப்பட்டப் போது, அதில் நிறைய பேருக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு உணவுக் குடுத்து உதவினேன். சாமி மாதிரி வந்து சாப்பாடு கொடுத்த நீயும் உன் குடும்பமும், எப்பவும் நல்லா இருக்கணும்னு அவங்க வாழ்த்தினபோது கிடைச்ச ஆத்ம திருப்தி, நான் முப்பது வருஷம் கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை பார்த்தபோது கூட கிடைக்கலை.

விவசாய நிலங்கள் பிளாட்டா மாறுகிற இந்தக் காலத்துலே, இயற்கையோடு இணைத்து வாழும் விவசாயம் தான் சரியான தொழில். இந்த நாட்டு மக்களை பஞ்சத்துல விழுந்திடாம காக்கப் போற கடைசி நம்பிக்கை, விவசாயி தான். அந்த நம்பிக்கைக்கு பங்கம் வராம இருக்க என்னால முடிஞ்ச அளவு விவசாயத்தை காப்பாத்த நினைக்குறேன். இது தப்பு இல்லை தானே? பணத்தை பாங்கில் போட்டா வட்டி வரும். ஆனா, எவ்ளோ பணம் கொடுத்தாலும் சானிடைசர், மாஸ்க், அத்யாவசிய பொருட்கள் எல்லாம் கொரோனா வந்தப்போது வாங்க முடிஞ்சதா என்ன. வட்டிப் பணம் என்பது சந்தை பொருளாதாரம்னா, விவசாயம் என்பது, தற்சார்பு பொருளாதாரம். இதை என் மகன் தலைமுறை புரிஞ்சிக்கல சரியா. இதை உன்னோட தலைமுறையாவது புரிஞ்சி செயல்படனும் கண்ணம்மா… என்று சொன்னாங்க தாத்தா.  

இதைக் கேட்ட சரவணன் மனதில் அப்பாவை நினைத்து ஒரு நிமிடம் பெருமிதம் பொங்கியது. அவரிடம் கோபமாய் பேசியதற்கு மானசீகமாய் மன்னிப்புக் கேட்டான். நாளைக்கு காலைல அரவிந்தனை கூப்பிட்டு பேசினா, கண்டிப்பா ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். நாளை விடியும் நாள் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை உண்டாக்கும் என்று அவன் மானசீகமாய் நினைத்தப்போது, உலகில் எங்கோ உள்ள ஒரு விவசாயின் கனவாகவே இந்த பிரபஞ்சம் அதைப் பதிவு செய்தது.

– கதைப் படிக்கலாம் – 84

இதையும் படியுங்கள் : இறைவனோடு பேசுகிறேன்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மாணவர்களுக்கு ஆதரவாக அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்

Next Post

இறைவனோடு பேசுகிறேன்

Next Post

இறைவனோடு பேசுகிறேன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version