செய்தி அலை சிறுகதைப் போட்டி– 124 தங்க மீன் -சக்தி ராணி வண்ண வண்ண மீன்கள் கண்ணாடித் தொட்டியில் நீந்திக் கொண்டிருந்தன.அதையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அகல்யா... அகல்யா குக்கர் விசில்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 123 அதுவும் ஒரு சராசரி நாலே-மோனிகாசங்கர் நாள் 10 .11 .2014 திங்கட்கிழமை என்றும் போல் அன்றும் என் தொலைபேசிக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 122 மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி எங்கிருந்தோ பெரிய பெரிய மேகங்கள் மெல்ல நகர்ந்து வந்து சூழத் தொடங்கியிருந்தன ஒரு பேரரசனின் யானைப் படையை போல. அது வரை வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று நின்று போய் சட்டென்று ஒரு புழுக்கம் பரவத் தொடங்கியது. காது மடல்களின் பின்னால், பின் கழுத்தில் வியர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின இது மழை வருவதற்கான அறிகுறிதான், எந்த வினாடியும் வந்து விடும் என்றுதான் தோன்றியது நாதனுக்கு. படுத்துக் கொண்டிருந்தவர் மெல்ல எழுந்து படுக்கையில் உட்கார்ந்து கொண்டார். கட்டிலுக்கு அருகில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி பனிரெண்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படியே பின்பக்கமாக மெல்லத் திரும்பி சுதாவைப் பார்த்தார். இன்னும் குறையாத கோபத்தோடு அவள் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தான் அவருக்குத் தோன்றியது. “வயசாச்சே தவிர குழந்தை மாதிரிதான்” என்று ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 121 பட்டாசு-ஶ்ரீதர் கோபால் தங்கம் மாமி ஒரு வாரமாக பர பரவென்று வேலைகள் செய்து கொண்டிருந்தார். ஜவுளி எடுத்தாகி விட்டது. பேரக்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 120 உபசாரம்-ஶ்ரீதர் கோபால் மாமனாருக்கு காஃபி எடுத்துக் கொண்டு போகும் போது பால்கனியில் அழுகை சத்தம் கேட்டது. தன் மாமனார் குலுங்கி...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 119 பித்தேறிய காதல்-நிலவுமொழி செந்தாமரை இருளில் தனிமையில் நிற்பதாய் ஓர் கனவு. திடீரென விழித்தாள். கனவினை மீளக்கொணரும் சில மணித்துளிப் போராட்டத்தில்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 118 ஒரு கொலை ஒரு முடிவு-ஶ்ரீதர் கோபால் "நாளீக்கு குடியரசு நாளு.. அந்தாளு மேல முட்டையை அடிக்க வேண்டியது உம்பொறுப்பு" ரிட்டயரான ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 117 கடைக்குட்டி-சபரிஷ் என் பேரு மணி. நான்தான் இந்த வீட்டடோட கடக்குட்டி. அதனாலயோ என்னமோ எங்க வீட்டுல எல்லாருக்கும் என்மேல பிரியம் ஜாஸ்தி. எனக்கு எங்க அம்மானா உயிரு. என்ன எதுக்காகவும், யாருக்காகவும் விட்டு குடுக்காது. எங்க ஐயாவுக்கும் என்மேல பாசம் ரொம்ப! ஏன்னா.. என்ன ஏன்னா? பிரியமா இருக்குறதுக்கு காரணம் வேணுமா என்ன? ஐயா காலையில கிளம்பி வயக்காடு, விவசாயம்னு போயிடுவாங்க. அக்கா வேலைக்கி, பெரியண்ணா வெளிநாட்டுல, கடசியா சின்ன அண்ணாவும் வேலைக்கி போறேனு எதோ ஐதராபாத்'தாம் அங்க போயிருச்சு! இப்ப நான் மட்டும்தான் வீட்ல! யாரு வீட்டுல இல்லனாலும் பரவால்ல எனக்கு அம்மா வீட்டல இருக்கனும். சமச்சாலும், வீட்டு வேல பாத்தாலும், ஆட்டுமாட்ட மேச்சாலும், குளத்துக்கு போனாலும் எங்கிட்ட பேசாம அது வேல ஆகாது. நானும் பின்னாடியே நிப்பேன். உண்மைய சொன்னா அதுக்காண்டியே ...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 116 நவராத்திரி தாம்பூல_பை சௌமியா சுப்ரமணியன் வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும்...
Read moreசெய்தி அலை சிறுகதைப் போட்டி– 115 ஒரு துண்டு ரயில்-நெய்வேலி பாரதிக்குமார் 1940 ஆம் வருடம் இடைச்சிவிளை புகைவண்டி நிலையம் இசக்கிமுத்து கொடி அசைக்க காத்திருந்தார். அதுதான் அந்த புகைவண்டி நிலையத்துக்கு வரும் கடைசி ரயில். ஒருவேளை அந்த புகைவண்டி நிலையத்துக்கே அன்று கடைசி தினமாகவும் இருக்கலாம். இனி ஓடுமா இல்லையோ என்பதால் கடைசி முறையாக அதில் பயணம் செய்துவிடுவோம் என்பதற்காகவும் வேடிக்கைப் பார்ப்பதற்காகவும் மக்கள் வழக்கத்தைவிட அதிகமாக நிலையத்தில் கூடி இருந்தனர். சீருடை உடுப்பை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டார். இனி அதை அணிய வாய்ப்பு இருக்குமா? அப்பா பார்க்கும் வைத்தியத்தொழில்தான் இனி நமக்கா? நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் வண்டி வருவது தெரிந்தது. நிலையத்துக்கு வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும். மாட்டு வண்டி வேகத்தில்தான் வரும் என்றாலும் அதன் அழகும் கம்பீரமும் தனிதான். மதராஸ்பட்டினத்தில் இருக்கும் பாரி கம்பெனிக்காரன்தான் திசையன்விளையில் இருந்து குலசை வரைக்கும் ரயில் விட்டான். இல்லை என்றால் இந்த ஊருக்கு எப்படி ரயில் வரும்? திசையன்விளை பனை மரத்து பதநீர் அவ்வளவு தித்திப்பா இருக்கும். அதிலேர்ந்து ...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh