நமது செய்தி அலை இணையப் பக்கத்தில் பதிவிடப்பட்ட, சிறுகதைப் போட்டிக்கான வாசக படைப்பாளர்களின் வரவேற்பு, எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.
200-க்கும் அதிகமான கதைகள், 50 ஆசிரியர்கள், 30 பேராசிரியர்கள், இளைஞர்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் இல்லத்தரசிகள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும், போட்டியாளர்கள் தங்கள் கதைகளை அனுப்பி இருக்கின்றனர். எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரும், இப்போட்டியில் பங்கேற்றிருக்கிறார்.
குக்கிராமத்தில் தொடங்கி, பட்டி தொட்டி, டெல்லி, தமிழ்நாடு, வெளிநாடுகளில் இருந்தும் சிறுகதைகள் வந்துள்ளன. இது ஒரு புதிய ஊக்கத்தை தந்துள்ளது. அனைத்து கதைகளுமே ஒன்றுக்கொன்று சளைத்ததாக இல்லை. இந்தக் கதைகளின், முதல் சுற்று வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நேரம் இது. வந்த அனைத்துமே முத்தான கதைகள், இவற்றில் சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது, எங்களுக்கு சற்றே சவால் நிறைந்த ஒன்று.
எனவே வாசகர்களின் படைப்புகளை வாசகர்களாகிய உங்களிடமே ஒப்படைக்கப் போகிறோம். இன்று முதல், நமது செய்தி அலை இணையதளத்தில் போட்டிக் கதைகள் வெளியாக இருக்கின்றன, நடுவர்கள் நீங்களே. உங்களுக்கு பிடித்த கதைகளுக்கு லைக் இடுங்கள். கமெண்ட் இடுங்கள். பகிருங்கள். வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்.
உங்களின் வரவேற்பு தான், எங்கள் அடுத்த புதிய முயற்சிக்கான உற்சாக டானிக்.
வாழ்த்துகளும், வணக்கங்களும்.
மேலும் தகவலுக்கு: www.seithialai.com