கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 13ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகள் மற்றும் Industry 4.0 தரத்தில் துவங்கப்பட்ட 5 புதிய தொழிற்பிரிவுகளில் பயிற்சிபெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் 8ஆம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தோச்சி கல்வித்தகுதியாக நிர்னயிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சம் 40 வயது வரை ஆண்கள் மற்றும்
பெண்கள் வயது வரம்பின்றி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது, கட்டணமில்லா பயிற்சியாகவும், மாதந்தோறும் ரூ.750/- உதவித்தொகையும், தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் வாயிலாக மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், On Job Training மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.skilltraining.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக வருகின்ற 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் விவரங்களை 044-22501350 என்ற தொலைபேசி எண்ணில் பெற்றுக்கொள்ளலாம் என்றும், கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சிநிலையத்தில் செயல்படும் இலவச உதவிமையத்தை நேரடியாக அணுகியும் விண்ணப்பிக்கலாம் என்றும் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.