3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்யக்கோரி டெல்லியில் மிக பிரம்மாண்ட டிராக்டர் பேரணியை விவசாயிகள் தொடங்கினர்.

புதுடெல்லி :
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அரசுடன் நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததால் 62 வது நாளான இன்று மேலும் 72 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டிராக்டர் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். ஹரியானா எல்லையான சிங்குவில் இருந்து தொடங்கும் இந்த டிராக்டர் பேரணி கன்ஜாவாலா , பவானா , அவுசான்டி எல்லை , கே.எம்.பி.எக்ஸ்பிரஸ் வழியாக மீண்டும் சிங்குவை வந்து அடைய இருக்கிறது.
Read more – பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் இல்லை : ரிசர்வ் வங்கி புதிய விளக்கம்
மேலும், திக்ரி எல்லையில் இருந்து தொடங்கும் 2 வது பேரணி நாக்லோ , நஜாப்கர் , மேற்கு எல்லைப் பகுதி எக்ஸ்பிரஸ் வழித்தடம் வழியாக மீண்டும் திக்ரியை சென்றடையும். 3 வது மற்றும் கடைசியாக டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூர் எல்லையில் இருந்து தொடங்கும் பேரணி குன்ட்லி , காஜியாபாத் , பல்வால் எக்ஸ்பிரஸ் வே வழியாக சென்று மீண்டும் காஜிப்பூரை அடையும். சுமார் 100 கிலோமீட்டருக்கு நடைபெறும் இந்த டிராக்டர் பேரணி மாலை 6 மணிக்கு முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




