செப்டம்பர் 27ம் தேதி முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
![ELECTRIC BUS ON TRIAL RUN FOR A WEEK IN TIRUMALA_ తిరుమలలో బ్యాటరీ బస్సు ప్రయోగాత్మంగా ప్రారంభం – TTD News](https://i0.wp.com/news.tirumala.org/wp-content/uploads/2018/04/TRIAL-RUN-OF-BATTERY-FREE-BUS5.jpg?resize=748%2C499&ssl=1)
திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி-திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து இயக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்ததை தொடர்ந்து ஒலெக்ட்ரா நிறுவனத்தின் புதிய மாடல் எலக்ட்ரிக் பேருந்து இன்று காலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டது. இந்த பேருந்துகளை இயக்கும் பொறுப்பு மெகா இன்ஜினியரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் 36 இருக்கைகள், குளிர்சாதனம், சிசிடிவி கேமரா, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கி.மீ வரை இயக்கலாம். வரும் 25ம் தேதிக்கு முன்பாக இன்னும் 10 பேருந்துகள் வரவுள்ளன. ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் வரும் 27ம் தேதி தொடங்க இருப்பதால் அன்றைய தினம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து பேருந்து சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.