பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்டு சுற்றுப் பயணத்திற்காக மட்டும், ரூ.517 கோடி செலவு செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுய விளம்பரம் மற்றும் செல்பிக்களுக்காக பிரதமர் மோடி அதிகளவில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதாகவும், பொதுமக்களின் பணத்தை வீணாக செலவழிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருக்கின்றன.
இந்த சுழலில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, வெளியுறவு இணையமைச்சர் அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் கூறியதாவது, பிரதமர் மோடி கடந்த 2015 முதல் தற்போது வரை 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். அதற்காக ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளன.
இவை நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய வளர்ச்சியில்முக்கிய பங்களித்தன. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு மற்றும் அணு பரவல் அல்லாதவை உள்ளிட்ட பலதரப்பட்ட மட்டத்தில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் இந்தியா இப்போது அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறது, என வெளியுறவு இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.