குழந்தையின் ஆன் லைன் வகுப்புக்காக தன் ஒரே வாழ்வாதாரமான மாட்டினை விற்ற பாசமிகு தந்தையின் சோகக்கதை….
கொரோனா நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது இதன் காரணமாக இந்தியாவில் மார்ச் 24 முதல் ஊரடங்கு கடை பிடிக்க பட்டு வருகிறது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூட பட்டு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன, தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருவதால் அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது.
இதனால் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் முறையில் பாடங்கள் எடுக்கப்படுகின்றன ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு போன் அவசியம் ஆகும் சாதாரணமாக ஒரு ஆண்ட்ராய்டு போனின் விலை 5,000 முதல் 6,000 வரை ஆகிறது. வசதி படைத்தவர்கள் வாங்குகின்றனர் ஆனால் ஒரு வேலை உணவுக்கே கஷ்டப்படும் குடும்பத்தினர் பாவம் என்ன செய்வார்கள் அப்படி ஒரு சம்பவம் தான் ஹிமாச்சல்பிரதேசம் மாநிலத்தில் நடந்து உள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் ஒரு கிராமத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் குல்தீப், இரண்டு குழந்தைக்கு தந்தையான குலதீப்பின் ஒரு குழந்தை 4 ஆம் வகுப்பும் மற்றொரு குழந்தை 2ஆம் வகுப்பும் படிக்கின்றனர், இரண்டு குழந்தைகளுக்கும் ஆன் லைன் வகுப்பு நடப்பதால் அவருக்கு இரண்டு ஆண்ட்ராய்டு போன்கள் தேவை பட்டது.
தன்னிடம் ஒரு தொலைபேசி கைவசம் உள்ள நிலையில் மற்றொரு தொலைபேசிக்கு எல்லோரிடமும் உதவி கேட்டு இருக்கார், யாரும் இவருக்கு உதவ முன்வராததால், தன்னுடைய வாழ்வாதாரமாக இருக்கும் ஒரே மாட்டினை ரூபாய் 6000 க்கு விற்று
ஆண்ட்ராய்டு தொலை பேசியை, தன் குழந்தையின் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கினார்.
தன் குழந்தையின் படிப்புக்காக தன் வாழ்வாதாரமாக இருந்த மாட்டை விற்ற குலதீப்பை நினைத்து பெருமை படுவதா? இல்லை அவருக்கு உதவ முன்வராத மனிதர்களை நினைத்து வருத்தப்படுவதா? இதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும். இந்த கொரோனா இன்னும் எத்தனை சோகக்கதைகளை சுமந்து செல்ல போகிறது என்று தெரியவில்லை.