இந்த மாத இறுதிக்குள் முதல் தொகுப்பாக 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேரும் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது.
பிரான்சிடமிருந்து ரூ.58,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிரான்சிடமிருந்து ரூ.58,000 கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பேரில் தற்போது இந்தியாவிற்கு ரபேல் விமனாங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவையும் பொருட்படுத்தாமல், குறித்த நேரத்தில் இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் வழங்கப்படும் என பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வருகிற 29ந் தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் 5 ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.