லக்கிம்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட உ.பி வழக்கறிஞர்கள் இருவர் தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு கடிதம்.
டெல்லி, நேற்றைய முன்தினம் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் அஜீஸ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சிவ்குமார் திரிபாதி மற்றும் சி.எஸ் பாண்டே ஆகியோர் தலைமை நீதிபதி என்.வி ரமனாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், லக்கிம்பூர் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். லக்கிம்பூர் விவகாரத்தை பொறுத்தவரை இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர், இதில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு மத்திய மற்றும் உத்தரபிரதேச அரசுக்கு எதிராக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால் மட்டுமே இவ்விவகாரம் முடிவுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளனர்.
இப்போதைய சூழலில் வன்முறைகள் அரசியலாக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர்கள் சிபிஐ விசாரித்தால் மட்டுமே உண்மை தெரியவரும் எனவும் அக்கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளனர்.