மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8 ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் 8 கட்டங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இங்கு 7 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 35 தொகுதிகளுக்கு உட்பட்ட 8 வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Read more – இன்றைய ராசிபலன் 29.04.2021!!!
மொத்தம் உள்ள 35 தொகுதிகளில் 5 பெண்கள் உள்பட 283 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். மேலும், 11 ஆயிரத்து 860 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.