சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் 2022 ல் தொடங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி :
சென்னை மீனம்பாக்கத்திலுள்ள விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச இரு முனையங்களை இணைத்து புதிய முனையத்தை அமைக்க மத்திய அரசு கடந்த 2018 ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. தற்போது காணப்படும் 2 வது மற்றும் 3 வது முனையத்தை இடித்து சுமார் 2 லட்சத்து 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் 2022 ல் தொடங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், புதிய முனையம் அமைக்கும் இந்த திட்டம் 2 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்டத்தில் ஏற்கனவே இருக்கும் 2 வது முனையத்தை இடித்துவிட்டு அங்கு புதிய முனையத்தை அமைத்து அந்த முனையத்தை வருகிற ஜூன் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர இருக்கிறது.
Read more – கேரளாவில் சிறை கைதிகளின் சீருடையில் மாற்றம் : டி-ஷர்ட், பெர்முடாஸ் அறிமுகம்
புதிய முனையம் சென்னை விமான நிலையத்தின் தற்போதைய திறனை ஆண்டுக்கு 2 கோடியே 10 லட்சம் பயணிகளிடமிருந்து ஆண்டுக்கு 3 கோடியே 50 லட்சம் பயணிகளாக உயர்த்தும் எனவும், அந்த புதிய முனையம் 2022 ல் தொடங்கும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.