மெட்ரோ நிலையத்தின் மேல் மாடியில் இருந்து குதித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியிலுள்ள பரபரப்பான மெட்ரோ நிலையங்களில் ஒன்று அக்சர்தாம். வழக்கம் போல பரபரப்பாக காணப்பட்ட இந்த ரயில் நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர், மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
இதை பார்த்த பொதுமக்கள் பலர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதேபோன்று சுற்றி இருந்தவர்கள் பலரும் பெண்ணை குதிக்க வேண்டாம் என்று கோரிக்கை இடுத்தனர். பெண் குதிக்க முற்பட்ட போது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
பெண் கீழே விழுந்து உயிரிழக்காத வகையில் பொதுமக்களுடன் சேர்ந்த அவர்கள் போர்வையை விரித்து பிடித்தனர். இருப்பினும் யாரும் சொல்வதை கேட்காத அந்த பெண், மேல் மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்தார்.
அப்போது அவருடைய காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பாதுகாப்பு படையினர் போர்வையில் அவரை தாங்கி பிடித்தும், பயனில்லை. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்துபோன பெண் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவர் செய்து வந்த வேலையை துறந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.