சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை வருகின்ற செப்டம்பர் 30 வரை மேலும் நீடிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி :
கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஜூன் மாதம் முதல் மத்திய அரசு படிப்படியாக பல தளர்வுகளை கொண்டு வருகிறது.கொரோனா பரவுதல் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றாலும்,மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு நேற்று முன் தினம் 4ம் கட்ட ஊரடங்கின் தளர்வுகளை அறிவித்தது.இதில்,மெட்ரோ ரயில் சேவைக்களும் அனுமதி அளித்தும் சர்வதேச விமான போக்குவரத்து எப்பொழுது தொடங்கும் என்பதை பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.இந்த நிலையில் ,சர்வதேச பயணிகள் விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை வரும் செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் [டிஜிசிஏ]அறிவித்தது.
அதனை தொடர்ந்து மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் விமானங்கள் இயக்க தடை இல்லை என்றும்,சிறப்பு விமானங்கள் வழக்கம் போல் இயக்கப்படும் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவை தொடர்கிறது.வந்தே பாரத திட்டத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்லும் சேவையும் தொடரும் எனவும் டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..




