தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய் இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இவரது அரசியல் வருகை மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த சூழலில் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் தாக்கல் செய்த மனுவில் பிரபல நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்து வந்தார். அதனை தான் 2021 ஆம் ஆண்டு தான் கண்டுபிடித்தேன். அதன் பிறகு அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை முறித்துக் கொள்வதாக எனக்கு வாக்குறுதி அளித்தார். ஆனாலும் விஜய் தொடர்ந்து அந்த நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்தார். இதனால், தான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். பலமுறை பலமுறை கேட்டும் விஜய் அந்த உறவில் தொடர்ந்து வந்தார்.
கடந்த 2021 முதல் விஜய் தன்னை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் காயப்படுத்தியதாக அந்த மனுவில் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி 2021 இல் இருந்து தன்னை தனியாக வாழுமாறு நிர்ப்பந்தித்தார். விஜயுடன் அடிக்கடி வெளிநாட்டு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை அந்த நடிகை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது.
என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கில் இரண்டாவது மனுதாரராக சேர்ப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன் என்று சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மனைவி விஜய் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவர்கள் குறித்து நடிகை த்ரிஷாவோடு தொடர்பு படுத்தி பேசியிருந்தார்.
ஒரு அரசியல் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விவகாரத்தில், அவதூறு பரப்புவதாக மிகப்பெரும் அதிர்வலைகளையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், அந்த கருத்துக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்திருந்தார்.த்ரிஷாவும் இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என சந்தேகங்கள் வலுக்கிறது..தேர்தல் நெருங்கும் நேரத்தில் தவெக தலைவர் விஜயின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக தனிப்பட்ட குடும்ப பிரச்சனையை அரசியலாக்க பாஜகவும், திமுகவும் சதி செய்வதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஒரு புகாரின் அடிப்படையில் மட்டுமே உண்மை இதுவென்று முடிவுக்கு வரமுடியாது என்கிற பட்சத்தில், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தவெக தலைவர் விஜய் தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.



