திருமண வாழ்க்கையில் இணக்கமில்லாத சூழலின் போது பிரிவதை தவிர வேறு வழி இல்லை.அது ஏற்பதற்கு கடினமாக இருந்தாலும், அதுவே தங்களுக்கு சிறந்த தீர்வாக இருந்தது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சிறந்த தம்பதிகளாக வலம் வருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடீரென பிரியப்போவதாக இருவரும் அறிவித்தனர். இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும், விமர்சனங்களும் சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டன. அதன்பிறகு இருவரும் தங்களது கேரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தி தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஷோவான ‘காபி வித் கரன் 7’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா கலந்து கொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்தார். அதில் சமந்தாவிடம், கரன் சில கேள்விகளை கேட்டார். அதில் ஒரு கேள்வி; இப்போது இருவரும் இணக்கமாக இருக்கிறீர்களா? இதற்கு பதிலளித்த சமந்தா “இப்போது எங்களை ஒரு அறையில் அடைத்து வைத்தால் அங்கு கூர்மையான பொருட்களை வைக்காமல் இருக்க வேண்டும்.” என்று கூறினார். பின்னர், எதிர்காலத்தில் இந்த கோபம் மாறினாலும் மாறலாம். திரும்பவும் காதல் வருமா என்ற கேள்விக்கு, “திரும்பவும் காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை, நான் இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்த வாழ்க்கை முறை எனக்கு வசதியாக இருக்கிறது.இனிமேல் நான் இன்னும் வெளிப்படையாக இருக்கப் போகிறேன்” என்றார்.
முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் நடிகர் அக்ஷய்குமாருடன் இணைந்து ஆடிய ‘ஊ சொல்றியா மாமா ’பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.




