தெலங்கானா மாநிலம், வாரங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் சிங் என்பவர் தனது மகன் சந்தீப் சிங் (8) பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நகரத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்திவரும் கங்கர் சிங் ஆஸ்திரேலியே சென்று திரும்பி இருந்தார். அப்போது அவர் சாக்லெட் வாங்கி வந்து இருந்தார்.
நேற்றுமுன் தினம் சந்தீப் சிங் தனது தந்தை ஆசையாக வாங்கி வந்த சாக்லெட்டை பள்ளிக்கு கொண்டு சென்று சாப்பிட்டுள்ளான். அப்போது சாக்லெட் சிறுவனின் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அச்சிறுவனை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் “சிறுவனின் தந்தை வாங்கிவந்த சாக்லேட்டை பள்ளிக்கு எடுத்துச் சென்றுள்ளான். சாக்லெட் சாப்பிட்ட சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனே சிறுவனை வாரங்கலில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை. அதனால் இச்சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை” என கூறினார்.