ஆப்கானிஸ்தான் – இந்தியா இடையிலான ஏற்றுமதியை மீண்டும் தொடங்க மூடப்பட்ட வாகா எல்லையை இன்று முதல் திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
‘கொரோனா’ பரவல் ஏற்பட்டதை அடுத்து மார்ச் மாதம் முதல் பஞ்சாப் பகுதியில் அமைந்துள்ள வாகா பகுதியை பாகிஸ்தான் தரப்பு மூடியது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பாகிஸ்தான் வழியே வாகா எல்லையை கடந்து இந்தியாவுக்குள் வருவது வழக்கம். வாகா எல்லையை பாகிஸ்தான் மூடியதால் ஏற்றுமதி தடைபட்டது. இதை சரி செய்ய வாகா எல்லையை மீண்டும் திறக்குமாறு பாகிஸ்தானிடம் ஆப்கன் அரசு வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று இன்று முதல் ஆப்கன் ஏற்றுமதிக்காக வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.