சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே இயக்கப்படும் ரயில்சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவுசெய்து. அதற்கான பணியை துரித படுத்தியது இதன் முதல்கட்டமாக வேளச்சேரி – புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
இதுதொடர்பாக ரயில்வேதுறை அதிகாரிகள் தெரிவித்ததாவது “ஆதம்பாக்கம் – பரங்கிமலை ரயில் திட்டப் பணிக்கு இருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துள்ளதால், மீண்டும்டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இருப்பினும், வேளச்சேரி – ஆதம்பாக்கம் இடையே பணிகள் முடியும் நிலையில் இருக்கின்றன. எனவே, கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதம்பாக்கம் வரை நீட்டிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரிவித்தனர்.