ஹிந்தி நீக்குங்க, அல்லது 22 மொழிகளையும் சேருங்க ; கன்னட மொழியை மேம்படுத்த புதிய முயற்சி
“எல்லா இடத்திலும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும்” என்று பெங்களூரு மெட்ரோ ரயில்வே நிர்வாகத்திடம் ஒரு உத்தரவிடப்பட்டுள்ளது.. “ஒன்று ஹிந்தியை நீக்குங்க, இல்லையென்றால், 22 மொழிகளையும் அதுகூட சேர்த்து வைங்க” என்று கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் இந்த உத்தரவில் அதிரடியாக கூறியுள்ளது
அம்மாநில தாய்மொழியான கன்னட மொழியை பலப்படுத்த, மேம்படுத்த பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒன்று இந்த கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம். இதற்கு முன், வாங்கி ஊழியர்கள் அனைவரும் 6 மாதங்களுக்குள் கன்னடம் கற்றால் மட்டுமே வேலையில் இருக்க முடியும் என்று ஒரு விதிமுறை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மாநிலத்தின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு நிலவி வரும் சமயத்தில், ஹிந்தியை முற்றிலும் அகற்றுங்கள் என்று உத்தரவு போடப்பட்டிருக்கிறது. கன்னட மேம்பாட்டு அதிகாரிகள், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு இதைப் பற்றி பேசினார்கள்.
அறிவிப்புகள், பலகைகள் போன்றவை இந்தியில் இருப்பது குறித்து பல புகார்கள் வந்தன. இந்தியாவில் 22 அலுவல் மொழிகள் இருக்கும் நிலையில், இந்தியில் வைப்பதாக இருந்தால், அண்டை மொழிகளான தமிழ், தெலுங்கு முதலியவற்றிலும் அறிவிப்புகள் வைக்கப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.