சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சபரிமலை கோவிலின் மேல்சாந்தி, மாலிகபுரம் கோவில் மேல்சாந்தி, ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தினார்.
முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலையில் தினமும் 30,000 பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஆண்டுதோறும் வரும் இந்த சீசனுக்கு கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று அல்லது ஆர்டி-பிசிஆர் நெகட்டிவ் சான்று கொண்டுவர வேண்டுமென தேவஸம் போர்டு கட்டாயப்படுத்தியுள்ளது.