உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இந்த மாதம் 26ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். இதையொட்டி அடுத்த தலைமை நீதிபதியை மரபுப்படி பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, யு.யு.லலித் பெயரை பரிந்துரை செய்தார். சட்ட அமைச்சகம் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் ஆகஸ்டு 27ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளதாக சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் 74 நாட்கள் தலைமை நீதிபதியாக பதவிவகிப்பார்.
யு.யு.லலித் பற்றிய சில தகவல்கள்:
*மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பிறந்த யு.யு.லலித், 1983ல் வழக்கறிஞராக பணியை தொடங்கியவர்.
*1986ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்தார்.
* 2014ல் மூத்த வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
*10 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்ற நீதிபதி ஆனார்.
*நவம்பர் 8ம் தேதி தனது 65வது வயதில் பணி ஓய்வு பெறுவார்.