எடப்பாடி பழனிசாமி உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்புகேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி இதுவரை 5 மாவட்டங்களுக்கு சென்று சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். சுதந்திர தினத்திற்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை தொடர இருக்கிறார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று சேலத்தை சேர்ந்த வக்கில் ஏ.பி.மணிகண்டன் சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.




