இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டிற்கான (2022) இளநிலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 8ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படிப்புகளுக்கு ஆகஸ்டு 25ம் நாள் கடைசிநாள் என கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ள மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in/ சென்று விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.