தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். நாளை திருச்சி, திருப்பூர், தேனி உள்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையின் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.