தமிழ்நாடு ஓய்வூதியதாரர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின்கீழ் சேரும் தொகையை பெற அவர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஓய்வூதியதாரர் பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் சேரும் நிதியானது ஓய்வூதியதாரர்களின் மறைவுக்கு பிறகு அவர்களது துணை அல்லது நியமனம் செய்யப்படும் நபருக்கு வழங்கப்படும். 1997ம் ஆண்டு பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழான நிதியைப் பெற ஓய்வூதியதாரர்கள் வாழும் காலத்திலேயே விண்ணப்பிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாழும் காலத்திலேயே அதற்கு விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்மூலம் விண்ணப்பங்களை சரியான முறையில் அளித்து தகுந்த நேரத்தில் அந்த தொகையைப் பெற முடியும் என கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.




