பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![TN Board Exam 2022: Tamil Nadu Board exams 2022 to begin from May 5 | - Times of India](https://i0.wp.com/static.toiimg.com/photo/msid-89944547/89944547.jpg?ssl=1)
அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 9ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக( 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு) கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்தாண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.