கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மே மாதம் நடக்க வேண்டிய JEE முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடத்தப்படும் என்று மத்திய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கோரி்க்கை அனைத்தும் நிராகரிக்கப்பட்டு இன்று முதல் தேர்வுகள் தொடங்குகிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத இருக்கிறார்கள்.
இன்று முதல் தேர்வு நடைபெற இருப்பதால் முன்கூட்டியே மாணவர்கள் மற்றும் மாணவிகள் மாஸ்க் அணிந்து கொண்டு தாங்களாகவே சானிடைசர் போன்றவற்றை எடுத்து கொண்டு சென்றனர். இருந்தாலும் முழு உடல் சோதனைக்குப்பின் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதும் மையத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அதிகாரிகள் வெப்பநிலையை அறியும் கருவியுடன் பரிசோதனை செய்த பின் தான் அனுமதிக்கின்றனர்.