முல்லை பெரியாறு அணை வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு புதிய பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

டெல்லி,
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில் கூறியுள்ளதாவது,அணைதொடர்பான தரவுகளை கேரளா அரசுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை! அணை தொடர்பான தரவுகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், கேரள அதிகாரிகளும் அணையில் தரவுகளை சேகரிக்கின்றனர்.
அணைக்களுக்கான வயது அல்லது அதன் ஆயுள் காலம் என்பது வரையறுக்கப்படாதது. ஏனெனில் பராமரிப்பு, பழுதுபார்த்தல், புதுப்பித்தல் ஆகியவை தான் அணியின் ஆயுளை தீர்மானிக்கின்றன. எனவே பெருமழை, பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை தாங்கி தண்ணீரை சேமித்து வழங்க முடிகிறதோ அதுவரை அதன் ஆயுள் உள்ளது. மேலும் அணையின் ஆயுட்காலம் என்பது அணையின் பராமரிப்பை பெறுத்ததே எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த முல்லை பெரியாறு விவகாரத்தில், அணையின் கட்டுமானம் மற்றும் அடிக்கட்டமைப்பு பலமாக உள்ளது என்று நிபுணர் குழுவே தெரிவித்துள்ளது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அங்குள்ள ஒலி அணை உடைந்த்து போன்று முல்லைப்பெரியாறு அணைக்கும் ஏற்படலாம் என கூறுவது தவறானது, ஏனெனில் முல்லை பெரியாறு அணை செஸ்மிக் மண்டலம் பகுதி 3ல் தான் உள்ளது, இங்கு பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு மிகமிக குறைவு, இதை ஏற்கனவே நிபுணர் குழுவின் முன்பு கேரளா அரசு முன்வைத்தபோது அது நிராகரிக்கப்பட்டது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முற்படுகிறது எனவும் ஆகவே கேரளாவின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விட்டு, அணை மதகுகள் இயக்கம், அணையின் இயக்க முறை தொடர்பாக மத்திய நீர்வள ஆணையம் தாக்கல் செய்த நிலை “Rule Curve” அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.




