வரும் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம். அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த வாரத்தை சேவை வாரமாகக் கொண்டாட பாஜக திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு 70வது பிறந்த தினம் வருகிறது.
இதை முன்னிட்டு கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் இந்த வாரம் முழுதும் தங்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
இதை குறித்து ஜெ.பி நட்டா கூறுகையில் ௨௦௧௪ மோடி ஆட்சிக்கு வந்தநாளில் இருந்து இவ்வளவு பாடுப்பட்டிருக்கின்றார் இன்று அனைவருக்கும் தெரியும். 2014-க்கு முன்பாக அரசியல் தலைவர்கள் வருவார்கள் வாக்குறுதி கொடுப்பார்கள், நிறைவேற்ற மாட்டார்கள். மோடி அதை மாற்றி விட்டார். நாம் மக்களுக்காக பணியாற்றி அதன் விவரங்களுடன் மக்களிடம் செல்கிறோம். இப்படித்தான் நாம் பணியாற்றுகிறோம். தற்போது பிரதமர் மோடி தன்னை மக்கள் சேவையில் அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். இப்போது சேவைதான் தேவை. வரிசையில் கடைசியில் நிற்கும் ஏழைகள், துன்பத்துக்கு ஆளானோர், ஒன்றுமில்லாதவர்கள், தலித்துக்களை நாம் மைய நீரோட்டத்துக்கு கொண்டு வரும் வகையில் பணியாற்றுகிறோம்.
அதை கொண்டாடும் வகையில் அவர் பிறந்த வாரத்தை சேவை வாரமாக கொண்டாட பாஜக முடிவு செய்துள்ளது. மேலும் அவர் ௭௦ இடங்களின் தூய்மை பணி செய்வதாகவும், பழங்கள் விநியோகிக்க போவதாகவும், 70 மாற்றுதிறனாளிகளிக்கு உபயோகப்படும் சாதனங்கல் வழங்க போவதாகவும் கூறியுள்ளார்.