சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவித்தொகை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவித்தொகை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெ.விஜயராணி செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதனில் அவர் கூறியதாவது. மாற்றுத்திரங்கள் பயன் பெறுவதற்கென்று இந்த இணையத்தளமானது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை, சுயதொழில் வங்கி கடன் உதவி, உதவி உபகரணங்கள், திருமண உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, பாதுகாவலர் சான்று, இலவச பேருந்து பயண சலுகை, மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் என அனைத்தையும் இருந்த இடத்தில இருந்தே பெற முடியும்.
இது மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளை யாருடைய உதவியும் இன்றி தாமே பெற்றுக்கொள்வதற்கு வழிவகைக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு விண்ணப்பிக்கும் வகையிலும் சில திட்டங்கள் நேரடியாக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் வகையிலும் உள்ளது.




