வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தற்போது இந்தியாவில் அத்தியாவசியம் அற்ற பொருட்களை இறக்குமதி செய்வது குறைத்து அதனை உள்நாட்டில் உற்பத்தி செய்யவேண்டும் என அதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில், கார்கள், பேருந்துகள், லாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்தப்படும் சில நியூமேடிக் டயர்களை அதனை இரக்கனுமதி செய்வதற்கு இந்திய தடைவிதித்தது. அதனை தொடர்ந்து தொலைக்காட்சி போன்ற இலை ஆடம்பர பொருட்களின் இறக்குமதியையும் தடைசெய்தது.
இதனை தொடர்ந்து இப்போது ஏர் கண்டிஷனர்கள் அதனையும் இறக்குமதி செய்வதில் தடை விதித்துள்ளது. மேலும் தொழில்நுட்ப தர கட்டுப்பாடுகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல வழிகளில், இறக்குமதியை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டது.
ஏர் கண்டிஷனர்கள் மற்றும் அசெம்பிள் செய்யப்படும் ஏர் கண்டிஷனரில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களில் 90 சதவீதம், சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி ஆகிறது. இதனை தடுக்கவும் உள்நாட்டு உற்பத்தியின் வேகத்தை அதிகரிக்கவும் இந்திய தற்போது இதுபோதுன்ற மெஷின்களின் இறக்குமதியை தடைசெய்துள்ளது. இந்தியாவில் இதுபோன்ற ஆடம்பர பொருட்களின் இரக்கனுமதியை தடை செய்ததால் இரண்டு நாடுகளில் பெரும் பொருளாதார வீழ்ச்சி சந்திக்கக்கூடும் என கருதப்படுகிறது.