எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் காயப்படுவதும் உயிரிழப்பது தற்போது நடந்து வருகின்றது. ஏனெனில் அதற்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி ஜம்மு காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுவதே காரணம்.
எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. அதற்கு நம் இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துதான் வருகின்றது.
காஷ்மீரின் சுந்தரபாணி பகுதியில் தற்போது பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சிலர் காயமடைந்தனர். சிறிய ரக ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு மற்றும் மோர்ட்டார் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம், பதிலடி கொடுத்தது.அதில் நாயக் அனீஸ் தாமஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.