பள்ளிகளுக்கு சென்றுவரும் சிறுமிகளுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை கொடுத்த டீ கடை மாஸ்டர் கைது
திருவொற்றியூர் ராஜாகடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் தன் அம்மா வெற்றிக்கு சென்று விட்டார். இவர் தற்போது தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் வீட்டின் அருகில் விளையாட வரும் சிறுமிககுக்கு இவர் பாலியல் தொல்லை தந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அங்குள்ள பகுதியினர் இவர் மேல் குற்றம் சாட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதனை விசாரித்த போலீசார் போக்சோ சட்டத்தில் ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.