தொற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த கஷாயம் செய்து அருந்திப் பாருங்கள்.
மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று, நோய் எதிர்ப்பு சக்தி தரும் பானங்கள் குடிப்பது.
தேவையான பொருட்கள்:
4-5 துளசி இலைகள்
1/2 டீ ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்
1/4 டீ ஸ்பூன் கருப்பு மிளகு தூள்
1 அங்குல அளவிற்கு இஞ்சி
3-4 கருப்பு கிஸ்மிஸ் பழம்
தயாரிக்கும் முறை:
- ஒரு கனமான பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
- அதில் துளசி, இலவங்கப்பட்டைத் தூள், கருப்பு மிளகு, இஞ்சி, திராட்சையும் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி விட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
- பிறகு ஆறியதும் வடிகட்டிக் குடியுங்கள்.
- இதன் சுவையை அதிகரிக்க ஒரு துண்டு வெல்லம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
நன்மைகள்:
- இந்த துளசி பானம் உங்க செரிமானத்தை மேம்படுத்தும்
- உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- துளசி, இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.
- துளிசியில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சுவாச பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
எனவே இந்த துளசி பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று குடித்து வருவது உங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். சளி, காய்ச்சலை விரட்டுவதோடு தொற்றிலிருந்து சீக்கிரம் மீளவும் உதவி புரியும் .
உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டர் பானம் ரெடி.