இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் காரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டது என்றும் இந்த பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது விடுமுறை தினங்களான கடந்த ஜூலை 10, ஆகஸ்டு 7 மற்றும் செப்டம்பர் 4-ந்தேதி ஆகிய நாட்களில் மேற்கொண்டனர்.
எனவே ரேஷன் கடைகள் வேலை நாட்களாக செயல்பட்ட அந்த நாட்களுக்கு செப்டம்பர் 19, அக்டோபர் 17(இன்று), நவம்பர் 21-ந்தேதி ஆகிய 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது இதனால் 2 வது வார விடுமுறை இன்று விடப்படுவதால் இன்று ரேஷன் கடைகள் செயல் படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.