Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

நிறுத்திக்கொள்ளுங்கள்: 2ஜி வழக்கில் முதல்வருக்கு ஆ.ராசா எச்சரிக்கை!

December 9, 2020

2ஜி வழக்கு தொடர்பான விமர்சனத்தை முதல்வர் இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஆ.ராசா எச்சரித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் தொகையைப் போல 2 ஜியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முதல்வருடன் கோட்டையில் நேரடியாக விவாதிக்க தயார் என அறிவித்தார்.அத்துடன் கோடி கோடியாக கொள்ளையடித்து அரசியலமைப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி ஜெயலலிதா என்றும் விமர்சித்தார்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

இதற்கு பதிலளித்த முதல்வர், 2ஜி வழக்கில் சிபிஐ உரிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால்தான் ராசா தப்பியுள்ளார் என்று குற்றம்சாட்டினார். இதனிடையே கொள்ளைகாரி என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்படவில்லை என்று ஜெயலலிதாவின் முன்னாள் வழக்கறிஞர் ஜோதி பேட்டியளித்தார். இறந்த பிறகு ஜெயலலிதாவை ஏன் விமர்சிக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.


இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, 2 ஜி வழக்கையும், சொத்துக் குவிப்பு வழக்கையும் ஒப்பிட்டுப் பேசினார். 2ஜி வழக்கின் தீர்ப்பு நகல்களை வெளியிட்ட அவர், 2 ஜி வழக்கின் தீர்ப்பில் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்களையும் சிபிஐ நிரூபிக்கவில்லை, அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2ஜி வழக்கு வதந்தி, கிசுகிசு யூகம்தான் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது என சுட்டிக்காட்டினார்.


ஆனால், முதல்வர் தனது தகுதியை மீறி விமர்சித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்கவும், விவாதத்திற்கும் தயாராக இருக்கிறேன். எனது அழைப்புக்கு அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்று கூறிய ராசா, ஆனால், ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில், மக்களாட்சி தத்துவத்தின் அடித்தளமான அரசமைப்பு சட்டத்தின் மீது நடத்தப்பட்ட மன்னிக்க முடியாத படுகொலை என குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சசிகலா உள்ளிட்டோர் அரசு பதவியில் இல்லாததால் இது ஜெயலலிதாவையே குறிக்கும் என்றார்.


ஜெயலலிதாவை தவிர்த்து விட்டு சசிகலா, இளவரசி சுதாகரன் மட்டுமே குற்றவாளி என்று சொல்லமுடியாது எனவும், இறந்து போனாலும் முதல் குற்றவாளியாக ஜெயலலிதாவை தான் நீதிமன்றம் கூறுவதாகவும் தெரிவித்தார் ஆ.ராசா. அத்துடன், சொத்துக் குவிப்பு விவரத்தை மறைத்து அதிமுகவினர் பேசிவருகிறார்கள் என்றதோடு, முதல்வர் இத்துடன் 2 ஜி தொடர்பான தனது விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

விவசாயிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி:14 வது நாளாக இன்றும் தொடரும் போராட்டம்

Next Post

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது : டேவிட் வார்னர் புகழாரம்

Next Post

நடராஜனை நினைத்து என்னால் மகிழ்ச்சியடையாமல் இருக்க முடியாது : டேவிட் வார்னர் புகழாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version