அம்பேத்கர் தீண்டாமை ஒழிய பாடுபட்ட சமூகநீதி புரட்சியாளர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அம்பேத்கர் நினைவு நாள்
இந்திய அரசியலமைப்பை இயற்றிய அம்பேத்கரின் 64வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமூகநீதி புரட்சியாளர்
இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- சமூக நீதி புரட்சியாளர், தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவர், பன்முகத்தன்மையாளர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுத்தலைவர், பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கர் அவர்களை நினைவு கூர்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




