புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றம்
நமது நாட்டிற்கு புதிய நாடாளுமன்றம் கட்டப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இதையடுத்து, அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் வாழ்த்து
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளதற்காக உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இது சுதந்திர இந்தியாவின் மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன். இத்திட்டத்தை வடிவமைப்பதில் உங்களின் தனிபட்ட தொடர்புக்கு தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன். இந்த விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.